மங்களவின் வரவு செலவுத் திட்டத்தை பாராட்டுகிறார் சுமந்திரன்!

தேர்தலைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் எனக் கூறப்பட்டாலும் நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டமாக இது அமைந்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஒரு தரப்பு மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி வடக்கு கிழக்குக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் செயற்றிட்டங்களை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!