பிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறார் ஹரீஸ்

அம்பாறை கரையோர மாவட்டம் உருவாக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக பிரதமர் எமக்களித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!