மண்ணை உண்ணும் மக்கள்!

அமெரிக்கா கண்டத்திலுள்ள ஹைத்தி நாட்டு மக்கள் பசியாற்றிக் கொள்ள, மண்ணை உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இவர் ஹைத்தியின் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரைச் சேர்ந்த லூயிசெனா ஜோசப். இவர் தனது குடும்பத்துடன் சுடும் வெயிலில் அமர்ந்து, மண் பிசைந்து கொண்டிருப்பது மண் பாண்டங்கள் செய்வதற்கல்ல, மண் கேக் செய்வதற்காக.

அது என்ன மண் கேக்? காசு கொடுத்து அரிசியோ, பழங்களோ, காய்கறிகளோ, மாமிசமோ வாங்க முடியாத ஏழை மக்களின் புதிய வகை உணவுதான் மண் கேக்.

மண் கேக் உண்ணும் பரிதாப நிலை, லூயிசெனா ஜோசப்பிற்கு மட்டுமல்ல. ஹைத்தி நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களுக்கு தற்போதைய சூழலில் இதுதான் பிரதான, சுவையான உணவு.

வீடுகளில் மட்டுமே கிடைத்த மண் கேக், தற்போது வீதிகள் மற்றும் சந்தைகளில் விற்பனைக்கும் வந்துவிட்டன.

இந்த உணவு வயிறு சம்மந்தமான சில நோய்களுக்கு தீர்வு தரும் என்று வைத்தியர்கள் தெரிவித்தாலும் அது ஆறுதலுக்கான செய்தியாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஹைத்தியில் 50 லட்சம் மக்கள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வாழ்வதாக, ஐ.நா.வின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!