வாகன விபத்தில் பரிதாபமாக 25 பேர் பலி:மெக்சிக்கோவில் சம்பவம்

மெக்சிக்கோவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்வம் தொடரபில் தெரியவருவதாவது,எதிர்பாராத விதத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி தலை கீழாக விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான லொறியில் பயணம் செய்த அகதிகளில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையினல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை மெக்சிகோ செஞ்சிலுவை சங்கத்தினர், மனித உரிமை பாதுகாப்பு முகாமையினர், அந்நாட்டு பொலிஸார் என அணைவரும் செய்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!