“தேர்தலில் வரலாறு காணாத வாக்குசதவீதம் பதிவாக வேண்டும்” – பிரதமர் மோடி!

JAPAN-INDIA/
மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் மிகச்சிறப்பான முறையில் தேர்தல்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர், தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!