வவுனியா சிறைக்குள் நடக்கும் கூத்துகள்! – நீதிவானிடம் போட்டு உடைத்தார் கைதி

வவுனியா- சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் இணைந்து ஏனைய கைதிகளுக்கு புரியும் அநீதிகள் தொடர்பாக, விளக்கமறியல் கைதி ஒருவர் பதில் நீதவானிடம் முறையிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் இருந்து வவுனியா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட விளக்கமறியல் கைதி ஒருவர், தனது கைகளை உயர்த்தி நீதிவானிடம் சில விடயங்களை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கடமையில் இருந்த பதில் நீதிவான் கைதிக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார்.

இதன்போது கைதி, வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு பல்வேறான அநீதிகள் இடம்பெறுவதாகவும், கைதிகள் நல்ல இடத்தில் உறங்குவதற்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை பெறப்படுவதாகவும் அப்பணம் வழங்கப்படா விட்டால் மலசல கூட பகுதியிலேயே தங்க விடப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், சிறைச்சாலைக்குள் புகையிலை போதைப்பொருள் பாவனையும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறான செயற்பாடுகளை சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், நீண்ட நாள் கைதிகளாக இருப்பவர்களும் இணைந்தே மேற்கொண்டு வருவதாகவும்; தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அனைத்து சட்டத்தரணிகளும் எழுந்து, குறித்த கைதி சுட்டிக்காட்டும் பிரச்சpனை சிறைச்சாலையில் இடம்பெறுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், பதில் நீதpவான் வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரியை நீதிமன்றத்துக்கு அழைத்து, குறித்த கைதி தெரிவித்த கருத்தினை சுட்டிக்காட்டி இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!