54 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்!

தமிழகத்திலிருந்து 54 அகதிகள் நாடு திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இவர்கள் இன்றும் நாளை மறுதினமும் நாடு திரும்பவுள்ளனர்.

விமான மூலம், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளதுடன், இவர்கள் இவர்களது சொந்த இடமான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மீள குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!