கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளரென்றால் ஆதரவு வழங்கமாட்டேன் – குமார வெல்கம

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெறவில்லை. ஒருவேளை இவர்தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்றால் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது இரு தரப்பிலும் போட்டித்தன்மை காணப்படுகின்றது. ஒரு நபரை ஜனாதிபதி வேட்பாளர் என்று பெயர் குறிப்பிட்டு அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் தங்களின் அரசியல் இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக முயற்சி செய்கின்றார்கள். நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயக கோட்பாடுகளையும், கடந்து வந்த சம்பவங்களையும் மறந்து விடுகின்றார்கள்.

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெறவில்லை. ஒருவேளை இவர்தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்றால் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன். அந்நிலையில் முக்கிய அரசியல் தீர்வுகளை மேற்கொள்ள நேரிடும். இவ்வருடம் தேர்தல் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் தேர்தல் இடம்பெறுவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலை எந்நேரத்தில் நடத்த வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை எவராலும் மாற்றியமைக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அவை சாத்தியமற்றதாகி விடும் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் குறிப்பிட்ட திகதியில் இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!