“ஒருவர் மீதொருவர் சேறு பூசுவதால் மின்சார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது”

ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாக மின்சார நெருக்கடிக்கான தீர்வினைக் காண முடியாது எனத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இதற்கான தீர்வினை கண்டறிந்து, ஒருமித்து அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே இந் நெருக்கடி நிலையிலிருந்து மீளமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

மின்வெட்டு குறித்து அரசியல்வாதிகளுக்கு இடையிலேயே ஒருவர் மீதொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையிலேயே, சபாநாயகர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!