“சம்பிக்க, வஜிர சுயமாக பதவிகளை துறக்க வேண்டும்”

அரசாங்கத்தின் இறுதி அத்தியாயம் ஆரம்பித்து விட்டது. இரண்டு அமைச்சுக்கான செலவு தலைப்புகள் தொடர்பிலான நிதி செலவீன ஒதுக்கீடுகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் சுயமாகவே தமது அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!