பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே பாதசாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
வாகன விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.
பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே பாதசாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கள் சாரதிகளும் அதில் செல்வோரும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேநேரம் பாதசாரிகளும் அதிகமாக உயிரிழப்பதாகவும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!