கடையிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய தந்தை!

உக்ரைனில் சேட்டை செய்த குழந்தையை கடையில் இருந்து வெளியே வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர். தலைநகர் கிவ்வில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆர்டம் ((Artem)) என்பவர் தனது 6 வயது மகளுடன் கடைக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தச் சிறுமி அதிக சுட்டித்தனத்துடன் சேட்டை செய்தார். மேலும் தான் விரும்பிய பொருளை வாங்கித்தரக் கேட்டு தந்தையிடம் அடம் பிடித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்டம் சிறுமியை இழுத்துச் சென்று வணிக வளாகத்தின் வெளியே படிக்கட்டில் தூக்கி வீசினார். இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த கிவ் நகர காவல்துறை ஆர்டமை கைது செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!