கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்

பிரித்தானிய கடற்படையின் HMS Montrose என்ற போர்க்கப்பல் நல்லெண்ண மற்றும் விநியோகத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இந்தப் போர்க்கப்பல், ஆழ்கடலில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பாக சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை நடத்தவுள்ளது.

இந்தப் போர்க்கப்பல், ஏவுகணை எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, மற்றும் ஏவுகணைத் தாக்குதல் வசதிகளைக் கொண்டதாகும்.

ஜப்பானுக்கான பயணத்தை முடித்து விட்டுத் மத்திய கிழக்கு நோக்கிப் பயணிக்கும் வழியில் இந்த பிரித்தானிய போர்க்கப்பல் சிறிலங்கா வந்துள்ளது.

இன்று இந்தப் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் செல்லவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!