அழிக்கப்பட்டது கொக்கைனா- கோதுமை மாவா?

கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் ஒருபோதும் மீண்டும் மக்கள் மத்தியில் வராது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார்.

நாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரியதொருதொகை கொக்கெய்ன் போதைப்பொருள் ஜனாதிபதி தலைமையில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடத்துக்கு நானும் சென்றிருந்தேன். என்றாலும் அந்த இடத்துக்கு நான் செல்வதற்கு முன்னர், இந்த போதைப்பொருள் அழிப்பு தொடர்பாக பேஸ்புக் பக்கங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக போதைப்பொருள் அழிப்பதாக தெரிவித்து கோதுமை மாவே அங்கு அழிக்கப்படுவதாக அதிகமானவர்கள் குறிப்பிட்டிருந்தனர். என்றாலும் கொக்கைன் அழிக்கப்படும்போது அந்த இடத்தில் நானும் இருந்தேன். நீதிபதிகளும் இருந்தனர். அங்கு அழிக்கப்பட்டது கொக்கைன் தான் என்பதை எனக்கு பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!