கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கருடா விமானம்!

இந்தோனேசியாவில் இருந்து ஜெட்டா நோக்கி பயணித்த பயணிகள் விமானம் ஒன்று நேற்றிரவு 9 மணியளவில் திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கருடா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. 338 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த இந்த விமானம், குறைந்த அழுத்தம் காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!