மங்களவின் அறிக்கை கண்டிக்கதக்கது – தினேஷ்

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.

வெளிவிவகார அமைச்சராக இல்லாத நிலையில் இத்தகையதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை எனத் தெரிவித்த, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அமைச்சரின் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!