கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் ‘Asagiri’ என்ற போர்க்கப்பல், மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

137 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில், 150 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் உள்ளனர்

கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினால் ஒழுங்கு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகளில் ஜப்பானிய கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர்.

நாளை கொழும்பு துறைமுகத்தை விட்ட இந்தக் கப்பல் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!