அரசாங்கத்தின் வாக்குறுதிகள் போலியாக்கப்பட்டுள்ளன – மஹிந்த

நடுத்தர மக்களின் வாகன கொள்வனவினை நனவாக்குவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் போலியாக்கப்பட்டுள்ளமை புதிய விடயமல்ல. இந்த அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் புதிய வரிகளை மாத்திரமே அறிமுகப்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி சங்கத்தினருக்கும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. வாகன இறக்குமதி தொடர்பில் வரவு – செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது இச்சந்திப்பின் பிரதான நோக்கமாக காணப்பட்டுள்ளது.

நடுத்தர மக்கள் வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்ய வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்ற கடன் வசதிகள் அனைத்தும் வெறும் விளம்பரமாக காணப்படுகின்றது. முழுமையாக அரசாங்கம் சாதாரண மக்களின் வாகன கொள்வனவு கனவிற்கு பல்வேறு வழிகளில் தடைகளை மாத்திரம் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!