ஊடகவியலாளரை படமெடுத்து அச்சுறுத்திய கடற்படையினர்!

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் காணாமற்போனோரின் உறவினர்கள் நேற்று நண்பகல் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு ஊடகவியலாளர்களை கடற்படை சிப்பாய் ஒருவர் அவரது கையடக்க தொலைபேசி ஊடாக நேருக்கு நேர்சென்று புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களினால் சம்பவ இடத்தில் நின்ற பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் போராட்டம் தொடர்பில் கடற்படை வீரர்கள் புகைப்படங்கள் எடுக்க பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் அனுமதியின்றி தனிநபர்களை புகைப்படம் எடுத்தல் குற்றம் தொடர்பிலான சட்ட ஆலோசனைகளும் கடற்படையினருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!