கோத்தாவை எதிர்ப்பேன்! – விஜித் விஜேமுனி சொய்ஸா

கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன் என்று தற்போது அரசாங்கத்துக்கு ஆதரவு அளிதது வரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஸாக்கள் வருவதற்கு நீங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதிலும், நாட்டிலுள்ள மக்கள் ராஜபக்ஸாக்களையே கோருகின்றனர் என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அவர்,“ கோத்தபாய ராஜபக்ஸ வேட்பாளராக வருவதற்கு நான் எதிரானவன். நான் எதனையும் நேரடியாக பேசுபவன். நிலத்தில் அமர்வதற்கும், உண்மை பேசுவதற்கும் பயப்படத் தேவையில்லை.மக்கள் சரியான தீர்ப்பை எடுப்பதாயின் புத்த பெருமான் பிறந்த இந்தியாவில் பௌத்தர்கள் அதிகமானவர்களாக இருந்திருக்க வேண்டும். மக்கள் எப்போதும் சரியான தீர்மானத்தை எடுப்பதாக கூற முடியாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!