திருட்டு வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட நபர்! – போலீஸை பார்த்ததும் ஓட்டம்.

சென்னையில் இருசக்கர வாகனத்தை திருடியவனை காவலர் ஒருவர் விரட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் தனசேகர் நேற்று மாலை சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்ட ஒருவரின் நடவடிக்கை சந்தேகப்படும்படியாக இருந்ததால், தனசேகர் விசாரிக்க முயன்றபோது அந்த நபர் திடீரென ஓட்டம் பிடித்தார்.

தப்பி ஓடிய நபர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனம் குறித்து விசாரித்த போது, அந்த வாகனம் அடையார் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தகவல் தெரிவித்த போலீசார் ஆவணங்களைச் சரிபார்த்த பின் அவரிடம் இருசக்கர வாகனத்தை ஒப்படைக்க உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!