டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட மதுஷின் கூட்டாளிகள் இருவர் கைது!

டுபாயில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான மாகந்துரே மதுஷின் சகாக்கள் இருவர் இன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யு.எல்.-226 என்ற விமானத்தில் இன்று மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய இருவரும் வந்தபோதே குற்றத்தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 30 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி மாகந்துரே மதுஷ் உட்பட 31 பேர் டுபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!