பொலிஸ் கொலை வழக்கில் பிள்ளையானின் சகா கைது!

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த வெல்லம்பிட்டிய திலான் சதுரங்க என்ற நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டக்களப்பு சிறையிலிருந்து விடுதலையான நிலையில் நேற்று மாலை சிறைச்சாலை வாசலில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் புதையல் தோண்டிய சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குறித்த வழக்கில் அபராதமாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறு நீதிமன்றம் அவரை கடந்த வாரம் தீர்ப்பளித்து விடுதலை செய்யதது. எனினும், அபராத தொகையை அன்றைய தினம் செலுத்ததன் காரணமாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அபராத தொகையை நீதிமன்றில் செலுத்திய பின்னர் நேற்று மாலை சிறையிலிருந்து விடுதலை செய்தபோது விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர், பிள்ளையானுடன் மிகவும் நெருக்கமானவர் எனவும் முன்னர் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றியவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!