புதிய தலைமை நீதியரசர் – சிறிலங்கா அதிபரின் பரிந்துரை கிடைக்கவில்லை

புதிய தலைமை நீதியரசர் நியமனத்துக்கான பரிந்துரைகள் எதுவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இதுவரை அரசியலமைப்பு சபைக்குக் கிடைக்கவில்லை என்று, அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

”கடந்த 6ஆம் நாள் அரசியலமைப்பு சபை கூடியபோது, புதிய தலைமை நீதியரசர் நியமனத்துக்கான பரிந்துரை முன்வைக்கப்படவில்லை.

எனினும், அரசியலமைப்பு சபையின் அடுத்த கூட்டம் இம்மாத இறுதியில், நடக்கும் போது, சிறிலங்கா அதிபரின் பரிந்துரை அனுப்பி வைக்கப்படலாம்.” என்றும் அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதியரசர் நளின் பெரேராவின் பதவிக்காலம் வரும் 29ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!