வடக்கு மாகாணத்தின் எல்லைப்புற மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற் றங்களை முன்னெடுக்கவே மாவட்டச் செயலர்கள் சிங்களவர்களாக நியமிக்கப்படு கின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த அதிகாரிகள் அண்மைக் காலமாக நியமிக்கப்பட்டு வருவதாக அறிகின்றேன். அதிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாகாணத்தின் எல்லைப் புற மாவட்டங்களின் மாவட்டச் செயலர்களாக சிங்கள அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நியமனத்தின் பிரதான நோக்கம் இந்தப் பிரதேசங்களில் தென்னிலங்கை சக்திகள் மேற்கொள்ள வேண்டிய திட்டமிட்ட குடியேற்றங்களை தடையின்றி செயற்படுத்தவே.
வடக்கில் உள்ள அதிகாரிகளை தெற்குக்கும் தெற்கில் உள்ள அதிகாரிகளை வடக்குக்கும் நியமிக்க வேண்டியிருப்பின் வடக்கு மாகாணத்துக்கு நியமிக்க வேண்டிய சிங்கள அதிகாரிகளை யாழ்ப்பாணத்துக்கு நியமியுங்கள். அதனை விடுத்து எல்லைப்புற பிரதேசங்களுக்கு நியமிப்பதை நிறுத்துங்கள் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!