சிங்­க­ளக் குடி­யேற்­றத்­துக்­கா­கவே வடக்­கில் சிங்­கள அதி­கா­ரி­கள்!!

வடக்கு மாகா­ணத்­தின் எல்­லைப்­புற மாவட்­டங்­க­ளில் திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற் றங்­களை முன்­னெ­டுக்­கவே மாவட்­டச் செய­லர்­கள் சிங்களவர்களாக நிய­மிக்­கப்­ப­டு­ கின்­ற­னர் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் குற்­றஞ் சாட்­டி­யுள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தில் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் அண்­மைக் கால­மாக நிய­மிக்­கப்­பட்டு வரு­வ­தாக அறி­கின்­றேன். அதி­லும் மன்­னார், முல்­லைத்­தீவு, வவு­னியா ஆகிய மாகா­ணத்­தின் எல்­லைப் புற மாவட்­டங்­க­ளின் மாவட்­டச் செய­லர்­க­ளாக சிங்­கள அதி­கா­ரி­களே நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவ்­வா­றான நிய­ம­னத்­தின் பிர­தான நோக்­கம் இந்­தப் பிர­தே­சங்­க­ளில் தென்­னி­லங்கை சக்­தி­கள் மேற்­கொள்ள வேண்­டிய திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களை தடை­யின்றி செயற்­ப­டுத்­தவே.

வடக்­கில் உள்ள அதி­கா­ரி­களை தெற்­குக்­கும் தெற்­கில் உள்ள அதி­கா­ரி­களை வடக்­குக்­கும் நிய­மிக்க வேண்­டி­யி­ருப்­பின் வடக்கு மாகா­ணத்­துக்கு நிய­மிக்க வேண்­டிய சிங்­கள அதி­கா­ரி­களை யாழ்ப்­பா­ணத்­துக்கு நிய­மி­யுங்­கள். அதனை விடுத்து எல்­லைப்­புற பிர­தே­சங்­க­ளுக்கு நிய­மிப்­பதை நிறுத்­துங்­கள் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!