தேசிய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அரச தலைவரின் உத்தரவினை மதிக்காமல் தான் தோன்றித்தனமாகவே செயற்படுகின்றது. மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை யின் காரணமாக இன்று முதல் சட்டப்படியாக நிர்ணயிக்கப்பட்ட கடமையில் ஈடுபடவுள்ளோம் என்று மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்தார்.
மின்சார சபை பொறியியலாளர்கள் தயாரித்த 20 ஆண்டு கால மின் பாவனை தொடர்பிலான திட்டத்தினை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு நிராகரித்து விட்டது. இவ்விடயம் தொடர்பில் அரச தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது.
மின்சார சபை பொறியியலாளர்கள் தயாரித்த 20 ஆண்டு காலத் திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு அரச தலைவர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்குக் கட்டளை பிறப்பித்தார். ஆனால் இன்று வரை அவ்விடயம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!