இன்று யாழ்ப்பாணத்துக்கு மேலாக சூரியன்!

யாழ்ப்பாணத்தின், சுருவில், அரியாலை, முகமாலை மற்றும் செம்பியன்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்று நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அந்த வைகயில் இன்று சுருவில், அரியாலை, முகமாலை மற்றும் செம்பியன்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.இதனால் வெப்பநிலை அதிகமாக இருக்கும். தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம்.இதன் காரணமாக, வெளியிடங்களில் வேலை செய்வோர் அடிக்கடி தண்ணீர் அருந்தி நிழலில் ஓய்வெடுப்பது அவசியம். முதியவர்களையும் நோயாளிகளையும் பரிசோதிப்பது அவசியம்.

பிள்ளைகளை தனியே விடக்கூடாது. இலேசான, வெளிர்நிற ஆடைகளை அணிவது உசிதமானது என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!