புதிய பிரதமர் நியமனமா? – மறுக்கிறார் அஜித் பெரேரா

அரசியலமைப்பின்படி புதிய பிரதமர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி இவ்வாறான முனைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டு அது தோல்வி கண்டது. எனவே மீண்டும் அவ்வாறான முனைப்பை எவரும் மேற்கொள்ளமாட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக்கட்சிக்குள் முரண்பாடுகள் எவையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அரசியல் குடும்பத்தை சேர்ந்த அல்லது அரசியல் சாராத ஒருவராக இருப்பார் என்றும் அமைச்சர் அஜி;த் பி பெரேரா தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!