தொழிலாளர் தினத்தன்று கழுதைகள் தினம் கொண்டாடிய அதிசய நகரம்!

உலகம் முழுவதும் தொழிலாளர் தினமான மே தினம் கொண்டாடப்பட்ட நிலையில் லத்தீன் அமெரிக்க நகரான ஒடம்பாவில் ,பொதி சுமந்து கடுமையாக உழைக்கும் கழுதைகளுக்கு கௌரவம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கழுதைகளுக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர். கழுதைகளுக்கு தலை முதல் பாதம் வரை வண்ண ஆடைகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.

பந்தயங்கள், போலோ ஆட்டங்கள் என்று கழுதைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. சுமார் 60 ஆண்டுகளாக உழைக்கும் விலங்கான கழுதையை லத்தீன் அமெரிக்க மக்கள் இப்படி கௌரவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!