“புலனாய்வு பிரிவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”

சர்வதேசத்தின் கருத்திற்கு செவிசாய்த்து அரச புலனாய்வு பிரிவை ஐக்கிய தேசிய கட்சி காட்டி கொடுத்தமையின் விளைவே இன்று சர்வதேச தாக்குதலுக்கு இடமளித்துள்ளது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைம காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் அரசியல் பழிவாங்களுக்காக சிறைபிடித்துள்ள புலனாய்வு பிரிவினரை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!