மில்டன் சிறைச்சாலையில் போதைப்பொருளை சாப்பிட்டு ஒருவர் உயிரிழப்பு!

கனடாவின் தெற்கு ஒன்ராறியோவிலுள்ள மில்டன் நகரிலுள்ள சிறைச்சாலைக்குள் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வகையான போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அவை எவ்வாறு சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!