“தாக்குதல் தொடர்பில் எனக்கு முன்னெச்சரிக்கை எதுவும் கிடைக்கப்பெறவில்லை”: சுமந்திரன்

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க்கட்சித்தலைவர் எனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை.

இந்த செய்தியினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இந்நிலையில், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பி, அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!