“பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கில்லை”

பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கில்லை எனத் தெரிவித்த தினேஷ் குணவர்தன, 19 ஆம் திருத்தம் மூலம் அந்த அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவந்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்றில் இன்று குறிப்பிட்டார்.

அத்துடன் அவசரகால சட்டம் அமுலில் இருப்பதால்தான் மக்கள் பாதுகாப்பு தொடர்பாக நம்பிக்கையுடன் இருக்கின்றனர். சோதனை நடவடிக்கையை பூரணமாக மேற்கொள்ளும்வரை அவசரகால சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உடனடியாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரவேண்டும். மத்தரசாக்களில் அரச மொழிகளில் அல்லாமல் வேறு மொழிகளில் கற்பிக்க தேவையில்லை. அதனால் மத்ரசாக்களில் கற்பிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட வேண்டும்

இந்த பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அவ்வாறா நிலையை ஏற்படுத்தி மக்களை வீதிக்கிறக்கவேண்டாம். பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் தேவை என்றால் அதனை மேற்கொள்ளலாம். மதத்தலைவர்களும் அதனையே தெரிவிக்கின்றனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!