பிரதி சபாநாயகர் யார்?- கைவிரித்தார் சபாநாயகர்!

பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையிலும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்றும் இதனால், பிரதி சபாநாயகர் தொடர்பில் தன்னால் எதனையும் அறிவிக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்தில் நேற்று கைவிரித்தார் சபாநாயகர் கரு ஜயசூரிய.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “பிரதி சபாநாயகராகக் கடமையாற்றிய, திலங்க சுமத்திபால, அந்தப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தைத் என்னிடம் கையளித்துள்ளார் ”என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!