காட்டிக் கொடுத்த சஹ்ரானின் மடிகணனி! – 40 பேரை தூக்கியது பொலிஸ்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் நுவரெலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைதாரி சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சஹ்ரானின் மடிகணனி கைப்பற்றப்பட்டது. அதில் பெறப்பட்ட தகவலுக்கமைய 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த இரண்டு வர்த்தகர்கள் பிபிலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இவர்களின் சொந்த இடமும் காத்தான்குடிதான். இந்த மடிகணனியில் 60 பேரின் பெயர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!