வெசாக் பண்டிகையை முன்னிட்டு 762 சிறைக்கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக்கைதிகளை விடுதலைசெய்யப்பட்டுள்ளார்கள் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிகடை சிறைசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில் 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50 கைதிகள்,பல்லன் சேன சிறைச்சாலையில் 53 கைதிகள் என்ற அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை வரலாற்றிலே இம்முறை தான் அதிகமான சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!