ஏனைய இனங்கள், மதத் தலங்களை தாக்கி, சிங்கள பௌத்த அரசை வலுப்படுத்த முடியாது! – சஜித் பிரேமதாஸ

ஏனைய இனங்களையும் மத வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்தி, சிங்கள பௌத்த அரசாங்கத்தை வலுவூட்ட முடியாது என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

‘இனப் பேதங்களை முன்னிலைப்படுத்தி வன்முறைகளை மேற்கொள்ளும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சம்புத்த சாசனம் சீர்குலைகிறது. பௌத்த சித்தாந்தங்களை பின்பற்றி அனைத்து இனத்தவர்களையும், மதங்களையும் பாதுகாத்து ஐக்கியத்துடன் வாழ வேண்டும். ஏனைய இனத்தவர் மற்றும் மதங்களின் வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்தி சிங்கள பௌத்த அரசாங்கத்தை வலுவூட்ட முடியாது. அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்குத் தேவையான நடைமுறை வலுவையும், பாதுகாப்பையும் பொதுமக்கள் வழங்காவிட்டால் பௌத்தம் வலுவடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!