வளர்ப்பு நாய்க்காக ஏரிக்குள் குதித்த பிரபலம்!!

பிரேசில் அதிபர் மிச்செல் டீமரின் மனைவி மார்செல்லா டீமர் தனது நாய்கள் வளர்ப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது வளர்ப்பு நாய் அதிபர் மாளிகை ஏரியினுள் இருந்த வாத்துக்களைப் பின் தொடர்ந்து சென்று உள்ளே குதித்தது.

ஆனால் சிறிது நேரத்தில் அது நீருக்குள் மூழ்க தொடங்கியது. அதனை பார்த்த மார்செல்லா தனது நாயைக் காப்பாற்ற ஏரிக்குள் குதித்தார். பின்னர் தனது நாயைக் காப்பற்றினார்.

எதைப்பற்றியும் யோசிக்காமல் அதிபரின் மனைவி நீந்தி தனது நாயைக் காப்பாற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. அவரது செயலுக்குப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!