எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும் அடையாளம் காணப்பட்டனர்

சஹ்ரான் காசிம் உள்ளிட்ட எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும், மரபணுச் சோதனையின் மூலம், அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தற்கொலைக் குண்டுதாரிகளின் உறவினர்களிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளைப் பயன்படுத்தி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினால் அனைவரது அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஷங்ரிலா விடுதியில் தாக்குதல் நடத்திய இன்சாப் அகமட் என்ற குண்டுதாரியின் எச்சங்களில் இருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகள், அவரது தந்தையின் மரபணு மாதிரிகளுடன் பொருந்தியுள்ளன.

ஷங்ரி லா விடுதியில் தாக்குதல் நடத்திய மற்றொரு குண்டுதாரியான சஹ்ரானின் மரபணுக்கள், அவரது மனைவி, மகளிடம் பெறப்பட்ட மரபணு மாதிரிகளுடன் பொருந்தியுள்ளது.

அதுபோலவே, ஏனைய குண்டுதாரிகளின் மரபணு மாதிரிகள், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளதாக சோதனைகளில் தெரிய வந்துள்ளது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!