3 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டு சடலங்கள் கிணற்றில் வீச்சு!

உத்தரப்பிரதேசத்தில் 3 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சார் ((Bulandshahr)) மாவட்டம் ஃபைசாலாபாத்தில் தான் இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமண வீடு ஒன்றில் இருந்து மூன்று குழந்தைகளும் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைகளின் உடல்கள் அதே ஊரில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன.

குழந்தைகளின் உடல்களில் தோட்டாக்கள் பாய்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் படுகொலைக்கு குடும்பப் பகை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணையில் சுணக்கம் காட்டியதாக ஒரு தலைமைக் காவலர் உள்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!