மெக்ஸிக்கோவிலிருந்து ஜப்பானுக்கு கொக்கெயின் போதைப் பொருளைக் கொண்ட 246 சிறுபொதிகளை விழுங்கி கடத்த முயன்ற ஜப்பானிய பிரஜையொருவர் விமானத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த மரணம் தொடர்பான தகவல்கள் நேற்று திங்கட்கிழமை வெளியாகி யுள்ளன. விமானம் மெக்ஸிக்கோவின் தலைநகரிலிருந்து புறப் பட்டு சிறிது நேரத்தில் அந்நபர் தன்னால் விழுங்கப்பட்ட பொதிகளிலிருந்து கொக்கெயின் போதைப்பொருள் அளவுக்கதிகமாக கசிந்ததால் மாரடைப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஜப்பானிய நகரான நறிடாவிற்கு பயணமான அந்த ஏரோமெக்ஸிக்கோ விமானம் மெக்ஸிக்கோவிலுள்ள ஹெர்மொஸிலோ நகர விமான நிலையத்தில் அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டது.
தொடர்ந்து அந்நபரின் உடல் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கையில், அவரது மரணத்திற்கு அவரால் விழுங்கப்பட்ட கொக்கெயின் பொதிகளே காரணம் என்பது கண்டறியப்பட்டது. உடோ என் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் அந்நபர் கொலம்பிய பொகோட்டா நகரிலிருந்து மெக்ஸிக்கோவுக்கு பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்து ஜப்பானுக்கு புறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!