கொழும்பில் பல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாம் ஐஎஸ்!

கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இராணுவத்தினர் கொழும்பின் பல பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பல இடங்கள் தொடர்பான 88 வரைபடங்கள், 106 இராணுவ உடைகள், இரண்டு சவுதி அரேபிய அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல் திட்டம் தொடர்பாக தகவல் கிடைத்த முதல் சந்தர்ப்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது. இதனை அருகில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!