மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை அவர், இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிம்ஸ்ரெக் அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ள 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் 8000 விருந்தினர்கள் இந்தப் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

57 பேரைக் கொண்ட இந்தியாவின் புதிய அமைச்சரவையும் நேற்று மாலை பதவியேற்றுள்ளது.

இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.

சிறிலங்கா அதிபருடன் அமைச்சர்கள் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!