எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான மனைவியை படுகொலை செய்த கணவன்

எயிட்ஸ் வைரஸ் தொற்­றுக்­குள்­ளான தனது மனை­வியை கணவர் படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் பாகிஸ்­தானில் நேற்று முன்தினம் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த சில வாரங்­க­ளாக அந்நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட எயிட்ஸ் நோயைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னையின் போது சுமார் 700 பேருக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து அந்நாட்டில் மக்­க­ளி­டையே கடும் பீதி நில­வு­கி­றது.மேற்­படி எயிட்ஸ் வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களில் பலர் சிறு­வர்­க­ளாவர்.

இந்­நி­லையில் சிந்து மாகாண நக­ரான லர்­கா­னா­விற்கு அரு­கி­லுள்ள கிரா­ம­மொன்றில் வசிக்கும் நான்கு பிள்­ளை­களின் தாயாரான 32 வயது பெண்­ணுக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்­பது பரி­சோ­த­னையின் போது கண்­ட­றி­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அவ­ருக்கு திரு­ம­ணத்­துக்கு அப்­பா­லான காதல் தொடர்பின் மூலமே நோய் ஏற்­பட்­டுள்­ள­தாக அவ­ரது கணவர் குற்­றஞ்­சாட்டி அவரைப் படு­கொலை செய்­த­தாக தெரிவிக்கப்­ப­டு­கி­றது.

தற்­போது குறித்த நபர் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

வைத்தியர்கள் சுத்­தி­க­ரிக்­காத உப­கர­ணங் களை பயன்­ப­டுத்­து­வது மற்றும் அவர்­களால் மேற்­கொள்­ளப்­படும் அலட்சியமான சிகிச்சை முறைகள் என்பன காரணமாகவே அந்நாட்டில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!