அணுவாயுதப் பரவல்த் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், அது சார்ந்த இழப்புக்களைச் சரிசெய்வதற்காக கச்சாய் எண்ணெயின் விலையை ஈரான் அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்த முறிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவால் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம். அவ்வாறான பொருளாதாரத் தடைகளைச் சரிசெய்வதற்கு ஈரான் தனது மிகப்பெரிய பொருளாதார வளமான கச்சாய் எண்ணெயின் விலையை அதிகரித்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
ஈரானின் முன்னாள் உள்ள மிகப்பெரிய தெரிவும் அதுவேதான். ஈரானும் அதையே செய்துள்ளது. அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ஒரே தினத்தில் 3 சதவீதத்தால் கச்சாய் எண்ணெயின் விலையை அதிகரித்தது ஈரான். பீப்பாய்க்கு 80 டொலர்கள் வரையில் எண்ணெயின் விலையை ஈரான் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானிடம் இருந்து இந்தியா மட்டும் நாளுக்கு சுமார் 3 லட்சம் பீப்பாய் கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!