புதுச்சேரியில் ஜான்சன் நிறுவன ஷாம்புகளை விற்க அரசு தடை!

புதுச்சேரியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத் தயாரிப்புகளை விற்பனை செய்யக் கூடாது என உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், ஜான்சன் நிறுவன தயாரிப்பான ஷாம்பு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜான்சன் நிறுவன ஷாம்புவை கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள போலீசார் கையிருப்பில் இருக்கும் ஷாம்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!