விசாரணையால் பாதுகாப்புக்கு பங்கம் வராது! – சரத் பொன்சேகா

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இரண்டாம் விசாரணை நேற்று பாரளுமன்றதில் இடம்பெற்றது. இதில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக .டி.சில்வா சாட்சியமளித்தார். இவருடைய சாட்சியங்கள் ஆரம்பிக்க முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!