பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை – பூஜித் ஜயசுந்தர பரபரப்பு சாட்சியம்

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தம்மைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபா சிறிசேன கூறியிருந்தார் என, கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சாட்சியம் அளித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக இன்று காலை சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கடைசியாக 2018 ஒக்ரோபர் 23 ஆம் நாள் நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே நான் கலந்து கொண்டிருந்தேன். அதற்குப் பின்னர், எந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் எனக்கு அறிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலர் ஊடாகவே அவர் இந்த தகவலை எனக்கு அறிவித்திருந்தார்” என்றும் பூஜித் ஜயசுந்தர சாட்சியம் அளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!