இன மற்றும் மத வன்முறைகளா ? 1956 க்கு அழையுங்கள்!!

இன மற்றும் மத வன்முறைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1956 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன மற்றும் மத வன்முறைகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சமாந்தரமாக கிராம மட்டத்தில் நல்லிணக்க சங்கங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இருமொழிகளில் உரைாயடக்கூடியவர்கள் மொழி பெயர்ப்பாளர்களாக நியமிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!