தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன். இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
2015 ஆம் ஆண்டு முதல் நான் ஐக்கிய தேசியக் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன். தொடர்ந்து இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட முடியாது.
எனவே தான் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்தேன். எனது மகனும் என்னுடன் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்கிறார் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!